Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்றுத்திறனாளிகள் போராட்டம்- காவல்துறையை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்- காவல்துறையை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையை அணுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “திடீரென சாலையில் அமர்ந்து யாரும் போராட முடியாது; காவல்துறை அனுமதி பெற வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர், அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும். போராட்டம் நடத்துவது அனைவருக்குமான உரிமை; அதை சட்டப்பூர்வ முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று மனுதாரரை அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிப்பு… ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் வழங்க வேண்டும் – அன்புமணி

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர்ந்து போராட்டம் வரும் நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வரும் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ