
தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!
இது தொடர்பாக, தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தெலங்கானா மாநில தி.மு.க. அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 30- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.