
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளனர். இனியும் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வாரா என்பது குறித்து பார்ப்போம்!
“ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த மிக முக்கியமான இரண்டு துறைகள், வேறு இரண்டு அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஏற்கனவே நிதித்துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தொல்லியல் துறை என மூன்று துறைகள் இருந்த நிலையில், மின்சாரத் துறையும் கூடுதல் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை போன்ற முக்கியமான காலங்களில் மின்சாரத்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இருப்பது அவசியம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 10 முறை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வரும் நவம்பர் 20- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தொடர்ச்சியாக, அமைச்சர் தரப்பில் சட்டப்போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் வழக்கறிஞர் சரவணன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்து வந்தார். அவரது கைதுக்கு பிறகு தற்போது வரை அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.
விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சி ரீதியாகவும், தி.மு.க. தயாராகி வருகிறது. எனவே, வரும் நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில், அவர் அமைச்சராகத் தொடர்வார் என்றும், அப்படி கிடைக்காத பட்சத்தில் மாற்று யோசனைக்கு முதலமைச்சர் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.