spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சாவூரில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு.
@EPSTamilNadu அவர்கள், நேற்று தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர், திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் திரு. P. சிவநேசன் அவர்களுக்கு ‘முரசு’ சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் விவசாயிகளை காக்க முடியும் டெல்டா மாவட்டங்கள் தமிழகத்திற்கு உணவு அளிக்கக்கூடிய மாவட்டங்களாகும். 3 ஆண்டுகால ஆட்சியில் திமுக விவசாயிகளுக்கு என்ன செய்தது? என்று நினைத்து பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்த போது டெல்டாவில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு தான். விவசாயிகளை கண் இமைப்போல காத்தது அதிமுக தான். விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை பெற்றுவிட்டு விவசாயிகளை மறந்த அரசு திமுக அரசு. வரிமேல் வரி போட்டு மக்களை வதைக்கும் அரசு திமுக அரசு என இவ்வாறு பேசினார்.

MUST READ