Homeசெய்திகள்தமிழ்நாடுகண்ணீருடன் பிரியாவிடை ...ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம்

கண்ணீருடன் பிரியாவிடை …ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம்

-

- Advertisement -

கண்ணீருடன் பிரியாவிடை ...ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம்

கண்ணீருடன் பிரியாவிடை … ஜெய்பீம் என முழங்கி ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவள்ளூர் அருகே பௌத்திக முறையில் இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது. திரளான தொண்டர்கள் ஜெய்பீம் என முழங்கி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

துணிவு படத்தைப் போல் உருவாக்கிறதா ‘விடாமுயற்சி’?

கட்சி தலைமை அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் போதிய சாலை வசதி உள்ளிட்ட காரணங்களை கூறி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பொத்தூரில் உறவினரின் சொந்த இடத்தில் அடக்கம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து பெரம்பூர் பள்ளி வளாகத்தில் இருந்து மலர்கள் தூவியபடி ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வாகனத்தில் ஏற்றி இறுதி ஊர்வலம் தொடங்கியது. சுமார் மாலை 4.30 மணிக்கு தொண்டர்கள் புடைசூழ ஜெய்பீம் முழக்கத்துடன் பெரம்பூரில் ஊர்வலம் தொடங்கி சுமார் 21 கி.மீ பயணித்து  7மணி நேரத்திற்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யும் பொத்தூருக்கு வந்தடைந்தது. அங்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் பௌத்திக முறையில் இறுதி சடங்குகளை செய்தனர்.

இதனையடுத்து சந்தன பேழையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டு அரச மரத்தின் அடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது தொண்டர்கள் ஜெய் பீம் என முழங்கி இறுதி அஞ்சலி செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர்,புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

MUST READ