Homeசெய்திகள்தமிழ்நாடுபண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு

-

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த பல விதிமுறைகளால் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட முடியாத நிலை பல்வேறு இடங்களை முடக்கி போட்டது.

 flight

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அனைவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என விமான கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10,000 முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூலிக்கப்படுகிறது.

MUST READ