Homeசெய்திகள்தமிழ்நாடுபூண்டின் விலை புதிய உச்சம்......சாமானிய மக்கள் கடும் பாதிப்பு!

பூண்டின் விலை புதிய உச்சம்……சாமானிய மக்கள் கடும் பாதிப்பு!

-

- Advertisement -

 

பூண்டின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால், சாமானிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் முதல் ரக பூண்டின் விலை மொத்த விற்பனையில் கிலோ ரூபாய் 500 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, முதல் ரக பூண்டு விலை ஒரே வாரத்தில் ரூபாய் 100 அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் சென்னை கோயம்பேட்டிற்கு பூண்டின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தினசரி 150 முதல் 200 டன் அளவிற்கு பூண்டுகள் கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 60 முதல் 80 டன் மட்டுமே வருகிறது.

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பூண்டு விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். சில்லறை விற்பனையில் இன்னும் கூடுதல் விலைக்கு பூண்டுகள் விற்பனையாவதால், சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பூண்டை பொதுமக்கள் தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

MUST READ