spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 352 உயர்ந்து ரூபாய் 46,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

கடந்த இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,080 வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று இதுவரை இல்லாத அளவாக தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 45,760- க்கு விற்பனையானது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 82.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

MUST READ