Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!

-

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5,930 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,015க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ