Homeசெய்திகள்தமிழ்நாடு"இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

"இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN GOVT

அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாராயணபுரம் ஏரி உடைந்தது….பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது!

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ