தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, புதுச்சேரி, மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் வெற்றி பெற்ற அந்த இந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா….. இயக்குனர் பகிர்ந்த தகவல்!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (ஜன.08) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், நாகை, கீழ்வேளூர் ஆகிய வட்டங்களிலும் இன்று (ஜன.08) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இம்மாத முடியவிருக்கும் தருவாயில், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்துள்ளனர்.