spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

-

- Advertisement -

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

L Murugan

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பா.ஜ.வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

we-r-hiring

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் விசாரிக்க முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

MUST READ