
ஆயுதப்பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்!
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (அக்.20) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலையில் 09.45 மணிக்கு நெல்லையைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து வரும் அக்டோபர் 24- ஆம் தேதி மாலை 05.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் வரும் சென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாகவும், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!
தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக, இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.