Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல் சூளை புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி பலி

செங்கல் சூளை புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி பலி

-

செங்கல் சூளை புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி பலி

வேலூர் அருகே செங்கல் சூளை புகையால் மூச்சு திணறி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் தெய்வ சிகாமணி (42), அம்முலு (33). இவர்கள் புதூர் அருகே மலையடி வாரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு சூளையை கொளுத்தி விட்டு அருகிலே படுத்து உறங்கியுள்ளனர். காலையில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அமுலு ஆகியோர் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சூளையிலிருந்து வெளிவந்த புகையின் காரணமாக இருவரும் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ