Homeசெய்திகள்தமிழ்நாடுCSKvsRR ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேர் கைது!

CSKvsRR ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேர் கைது!

-

- Advertisement -
ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
File Photo

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், போக போக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை தக்க வைத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிம்ரஜீத் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 27 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ