Homeசெய்திகள்தமிழ்நாடு100 நாள் தான் ஆகுது.. தமிழ்நாட்டுலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! - முதலமைச்சர் விஜயின் லண்டன்...

100 நாள் தான் ஆகுது.. தமிழ்நாட்டுலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! – முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்திற்கு ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

இது தொழில் புரட்சியா? அல்லது ரீல்ஸ் புரட்சியா? என முன்னாள் அதிமுக அமைச்சர் சாடல்.100 நாள் தான் ஆகுது.. தமிழ்நாட்டுலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! - முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்திற்கு ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் (லண்டன்) சென்றுள்ள நிலையில், அவரது இந்த வெளிநாட்டுப் பயணத்தைக் கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆர்.பி. உதயகுமார் பேட்டி:
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசுகையில்:

“புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாகவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொத்தடிமை முறைக் கொடுமைகள், விலைவாசி உயர்வு என அடுக்கடுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

சொந்த மாநிலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, அதை விட்டுவிட்டு முதலமைச்சர் அவசரகதியில் லண்டன் பயணம் மேற்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இந்த லண்டன் பயணம் மூலம் உண்மையிலேயே தமிழ்நாட்டிற்குத் தொழில் புரட்சி வரப்போகிறதா அல்லது வெறும் சமூக வலைதள விளம்பரத்திற்கான ‘ரீல்ஸ் புரட்சி’ செய்யப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது நியாயமல்ல” எனச் சாடினார்.

முதலமைச்சரின் லண்டன் பயணம்:
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் நேற்றிரவு (செப்டம்பர் 10) பயணிகள் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அவர், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு! அக்டோபருக்குள் சொத்து விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும்

MUST READ