Homeசெய்திகள்தமிழ்நாடு"பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை"- கனிமொழி எம்.பி. பேட்டி!

“பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!

-

 

"பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை"- கனிமொழி எம்.பி. பேட்டி!
Video crop image

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், சேதமடைந்த பகுதிகளையும் எம்.பி.க்கள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

‘உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?’- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!

அத்துடன், மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து அம்மாநில மக்களிடம் கேட்டறிந்த எம்.பி.க்கள் குழு அதனை பதிவுச் செய்துக் கொண்டது. அதேபோல், கடந்த மே 4- ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாருடன் எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்துப் பேசியது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், அம்மாநில ஆளுநர் அனுசுயாவை எதிர்க்கட்சிக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க எம்.பி.க்கள் குழு, ஆளுநரிடம் கோரிக்கை மனுவை வழங்கி வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள், டெல்லி திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி., “தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாதுகாப்புக் கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை” என்றார்.

மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!

அதைத் தொடர்ந்து பேசிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்.பி.,”தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர்” என்று கூறினார்.

MUST READ