Homeசெய்திகள்தமிழ்நாடுகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிரமடையும் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிரமடையும் விசாரணை!

-

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிரமடையும் விசாரணை!
File Photo

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து ஆத்தூர் நகராட்சி பொறியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில், கடந்த 2017- ஆம் ஆண்டு கொள்ளை. கொலை சம்பவம் நடைபெற்றது. பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலைச் செய்யப்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆத்தூர் நகராட்சி பொறியாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!

ஆத்தூரில் இருந்து சேலம்- சென்னை புறவழிச்சாலைக்கு செல்லும் வழியில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். கோடநாடு கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கார் மோதிய விபத்தில் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ