Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!

தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!

-

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபனை அதிரடியாக மாற்றியுள்ள கட்சியின் தலைமை, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலனை நியமித்துள்ளது.

“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மணிப்பூர் கொடூரங்களைக் கண்டித்து, கடந்த திங்கள்கிழமை அன்று தி.மு.க.வின் மகளிரணி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபனுக்கும், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

இந்த நிலையில், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து சிவபத்மநாபன் விடுவிக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதவிக்கு அவருக்கு பதிலாக, தி.மு.க.வின் சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

MUST READ