Homeசெய்திகள்தமிழ்நாடுகோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி

கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி

-

கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி

கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளது.

Kodanad Heist-Murder Case: Brother & Kin Of Jayalalithaa's Driver Arrested  For Destroying Evidence

கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரிடம் மறுவிசாரணை நடைபெற்றது. 2017ல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேசி தொலைப்பேசி பதிவுகளை சேகரித்துள்ளனர்.

இந்நிலையில் கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளது. கோடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா, சசிகலா அறைகளில் இருந்து சில பொருட்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொடநாடு கொலை

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள முனிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீசார், கைப்பற்ற 9 பொருட்களையும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கோடநாடு வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்ப நீதிபதி அனுமதி அளித்துள்ளதை அடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

MUST READ