கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்பவரை கைது செய்தது தனிப்படை காவல்துறை.
தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை!
கோவை மாவட்டத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.6 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர், தனிப்படை அமைத்து கொள்ளையடித்த மர்ம நபரைத் தேடி வந்தனர்.
கொள்ளைப்போன நகைகளில் சுமார் 4.3 கிலோ நகைகளை காவல்துறை கண்டறிந்து பறிமுதல் செய்திருந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட விஜய் என்பவரை தனிப்படை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். மாலை அணிந்து பக்தர் போல வேடமிட்டு சுற்றித்திரிந்த விஜயை தனிப்படை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!
அதைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.