Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-

தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவரது மருமகள் பூர்ணிமா (30) கடந்த 19ம் தேதி தனது வீட்டில் விளக்கு ஏற்றிய போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர் மீது தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த பூர்ணிமா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் பூர்ணிமா உயிரிழப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.P. அன்பழகன், M.L.A., அவர்களுடைய மருமகள் திருமதி S. பூர்ணிமா அவர்களுக்கு எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ