- Advertisement -
4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்
386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசார் யூடியூப்-க்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் ஆர்பிஐ அனுமதி பெறாத மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் தளங்களில் 40 சட்டவிரோத பதிவுகள், வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.