
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு என கூட்டணி கட்சிகள் பிசியாக உள்ளனர். இந்த சூழலில், தே.மு.தி.க.வை கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமை ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்.07) காலை 10.00 மணிக்கு நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, எவ்வளவு தொகுதிகளைப் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அண்ணாமலை டெல்லி பயணம்!
ஏற்கனவே, 7 மக்களவைத் தொகுதிகளுடன், 1 ராஜ்ஜிய சபா சீட் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. தலைமை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.