
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, அண்ணாமலை இன்று (பிப்.07) டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, அவர் இன்று இரவே டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். பின்னர், நாளை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார்.
வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் யாத்திரை நுழைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.