திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்ய தடை கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்து நாளை வரை விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி காஜா மலையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அதனை காலி செய்யும் அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், ” சந்தை மதிப்பில் 7% வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. 1,93,32,669 வாடகை ஆண்டுக்கு செலுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை உயர்த்தப்பட்ட நிலையில், அதில் முரண்கள் எழுந்ததால், அதனை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முயன்றோம்” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, “பொதுமக்கள் பயன்படுத்தும் இடமாக இருக்கும் நிலையில், குத்தகை விதிகள் மீறும் பட்சத்தில் உடனடியாக வெளியேற்றலாமா? ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசுத்தரப்பில், “குத்தகையை நீட்டிக்குமாறு மனு அளித்துவிட்டு, காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல. குத்தகை ஒப்பந்தத்திலேயே, குத்தகை காலம் முடிந்த பின்னர் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை. குத்தகை காலம் முடிந்த பின்னர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எதன் மீதும் உரிமை கோரவோ, இழப்பீடு கோரவோ கூடாது என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. 13.5.24 அன்றே குத்தகையை நீட்டித்து தர மனு அளிக்கப்பட்டது. 29 ஆண்டுகள், 11 மாதங்களாக எந்த மனுவும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் ஜாதி பெயர்களை அகற்ற பரிந்துரை (apcnewstamil.com)
ஏன் கடைசி நேரத்தில் மனு அளித்தீர்கள்? அதற்கு முன்பாக ஏன் மனு அளிக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். 2004 ஆம் ஆண்டு முதலே குத்தகை காலத்தை நீட்டிக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது என SRM தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கை நாளை ஒத்திவைத்தும், அதுவரை விடுதியை காலி செய்யும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.