Homeசெய்திகள்தமிழ்நாடுதெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ள ஆட்சி இந்த ஆட்சி- சேகர்பாபு

தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ள ஆட்சி இந்த ஆட்சி- சேகர்பாபு

-

தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ள ஆட்சி இந்த ஆட்சி- சேகர்பாபு

இறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற மகிழ்ச்சி கலந்த ஆன்மிக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

sekarbabu

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார், மேலும் குடமுழுக்கு திருப்பணியின் போது கிடைக்கப்பட்ட தேவார செப்பேடுகள் ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பார்வையிட்டு அவற்றின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு தான் 918 திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தீதாஞ்சேரி திருக்கோவில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு கண்டுள்ளது. இதுபோன்று 918 கோவில்களில் நூறு ஆண்டுகள் கடந்த 30க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்ட வரலாறு மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆன்மீக ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் 23 கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. சட்டநாதர் திருக்கோயில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம்தான் குடமுழுக்கு நடைபெற்றது. ஆகவே ஆண்டாண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் எல்லாம் குடமுழுக்கு விரைவு படுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக தளபதி அவர்களின் ஆட்சி நடந்து வருகிறது.

Sekarbabu

சட்டநாதர் கோயிலை பொறுத்த வரைக்கும் திருக்கோயில் குடமுழுக்கு பணிக்காக 16. 4. 2023 அன்று பள்ளம் தோன்றியபோது பல அறிய செப்பேடுகளும், உலோக திருமணிகளும், பூஜை பொருட்களும் கிடைத்துள்ளன. இதுவரை தேவாரம் ஓலைச்சுவடி மற்றும் நூல்களில் தான் கிடைத்துள்ளது முதன் முதலில் செப்பேடுகளில் இந்த தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ள வரலாறு முதல் முறை தமிழகத்தில் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஒரு ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாக உள்ளது. ஆன்மீகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற மகிழ்ச்சி கலந்த ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது” என தெரிவித்தார்.

MUST READ