Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதன விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம்- சேகர்பாபு

சனாதன விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம்- சேகர்பாபு

-

சனாதன விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம்- சேகர்பாபு

சனாதன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

sekarbabu

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ திருக்கோயில் ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்து சமய அறநிலை துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 திருக்கோவில்களுக்கு காலை சென்று மாலை வரை சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கியுள்ளது. ஆடி மாதமும் இதே போன்று ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி.

தற்போது தொடங்கிய ஆன்மீக சுற்றுலாவில் 62 பேர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது. சனாதன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ்-சை சட்டப்படி எதிர்கொள்வோம், நவராத்திரி கொண்டாட்டமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் 9 அம்மன்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
பக்தர்கள் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

MUST READ