spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை!

அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை!

-

- Advertisement -

 

அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை!

we-r-hiring

தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசா, பா.ஜ.க. சார்பில் எல்.முருகன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு அனைத்து கட்சியினரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆ.ராசாவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனி ஹெலிகாப்டர் மூலம் உதகை ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகை தந்தார். அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.

“ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

இதில் பணமோ, விலை உயர்ந்த பொருட்களோ இல்லை என உறுதி செய்த பின் அங்கிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

MUST READ