spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விவகாரம் - அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு!

கள்ளக்குறிச்சி விவகாரம் – அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு!

-

- Advertisement -

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - முதலமைச்சர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.

we-r-hiring

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாரய சம்பவத்தை ஆய்வு செய்ய அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சாராய மரணங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.

 

MUST READ