Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள்தான் உண்மையான மேல் அதிகாரிகள்- மு.க.ஸ்டாலின்

மக்கள்தான் உண்மையான மேல் அதிகாரிகள்- மு.க.ஸ்டாலின்

-

மக்கள்தான் உண்மையான மேல் அதிகாரிகள்- மு.க.ஸ்டாலின்

இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

சென்னை தலைமைச் செயலகத்தில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அண்ணா மேலாண்மை கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற 19 பேர் உட்பட குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற 33 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும், இத்தகைய உயர்பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம்தான் மேம்பட வேண்டும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File Photo

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற அதிகாரத்தை பெற்று தந்தவர் கலைஞர். நாடி வரும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. மக்களிடம் கனிவாக பழகுங்கள் அவர்கள்தான் நமது உண்மையான மேல் அதிகாரிகள். மக்களிடம்தான் நாம் நன்மதிப்பை பெற வேண்டும். சமூகத்தை பற்றி படிக்க வேண்டும். அகில இந்திய தேர்வினை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள், அடுத்துவரும் பயிற்சியை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடாதீர்கள். சமூகத்தைப் பற்றி படியுங்கள்” என பேசினார்.

MUST READ