நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் – திருமாவளவன் விமர்சனம்
இன்று (பிப்.02) அதிகாலை 05.00 மணி முதலே தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை முருகன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனையும் வழங்கியுள்ளனர்.
இடும்பாவனம் கார்த்தி தான் வெளியூரில் இருப்பதால், பிப்ரவரி 05- ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு பதில் அளித்துள்ளார்.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்று வரும் என்ஐஏ அதிகாரிகளின் சோதனையை எதிர்த்து, அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீடு குறித்து பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாகக் கூறி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.