Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா வழக்கு

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா வழக்கு

-

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தொடர்ந்த வழக்கில்  தற்போதைய மதுரை 293 வது ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய
ஆதீனத்தை மாவட்ட நீதிமன்றம் சேர்த்ததை ரத்து செய்யக்கோரி நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு

தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் விரிவான விவாதம் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293 வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதின பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா வழக்கில் அவரது தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னை (நித்தியானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.

இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் இறந்ததை அடுத்து முறைபடி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதினமாக முறைபடி பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், தற்போது எந்த வித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதினம் அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு

இது ஏற்புடையது அல்ல. இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னை (நித்தியானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் மறுத்தார். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மதுரை ஆதினம் அருணகிரி நாதர் மறைந்து விட்டார். இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் நியமனத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் சேர்த்துள்ளார்.

தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது (apcnewstamil.com)

இது விதிமீறல், இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை, இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் சேர்த்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வேண்டும் என சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது குறித்து, தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் விரிவான விவாதத்திற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

MUST READ