Homeசெய்திகள்தமிழ்நாடுபதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது - ...

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்

-

- Advertisement -

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது . எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றும் என் உயிர் மூச்சு அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாா்.பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது -  ஜெயகுமார் ஆவேசம்அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்,

பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, ”அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் நான் அதிமுகவில் இருந்து நான் விலகுவதாக  சொன்னேன் என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறார். நான் எந்த நேரத்திலும் அப்படி சொல்லவில்லை திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்தி அது. அதிமுக இயக்கத்தில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் நினைத்துக்கூட பார்க்க முடியாத செய்தியை சமூக வலைத்தளங்களில் நான்கு நாட்களாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

யூடியூப்  காரர்களுக்கு என்னால் வருமானம் கிடைப்பது மகிழ்ச்சி. என்னுடைய குடும்பம் திராவிட குடும்பம். 75 ஆண்டு காலம் என் அப்பாவின் அண்ணன் வடசென்னை பெரியார் என்று அழைக்கப்பட கூடியவர். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது. தன்மானத்தோடு இருக்கின்ற அதிமுக தான் எனக்கு அடையாளம் காட்டியது அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா தான். அதனால் வாழ்நாள் முழுவதும் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்.

வாழ்நாள் முழுவதும் என் உயிர் மூச்சு அதிமுக தான் தீய சக்தியான கலைஞரை ஒழிக்க வேண்டும் என்று தான் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது அந்த வழியில் தான் அதிமுக பயணிக்கிறது நானும் பயணிக்கிறேன் என கூறியுள்ளாா்.”

ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி?  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!

MUST READ