spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்... பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்… பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறைகளுக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று இருந்தனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் தென் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் பரனூர் சுங்கச் சாவடியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் பூத்கள் திறக்கப்பட்டு, வாகனங்கள அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

MUST READ