எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் ராமநாதபுரம், நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவம் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 13 பேரையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மீன்வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக மீனவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.