
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வேப்பம்பட்டு பகுதியில் இருந்து திருமழிசை, பூந்தமல்லி, புதுச்சத்திரம் வழியாக சென்னை செல்வதற்கு பிரதான வழியாக பயன்படுத்தப்படுகிறது
“பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும்……”- மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!
இதனிடையே ரயில்வே இருப்பு பாதையை கடப்பதற்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த 2010- ஆம் ஆண்டு சுமார் 30 கோடி அளவில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு 41% முடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளதால் ரயில்வே இருப்பு பாதையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (நவ.19) வேப்பம்பட்டு இருப்பு பாதையை இரண்டு மகள்களுடன் கடக்க முயன்ற தந்தை ஆகியோர் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற திருத்தணி பாஸ்ட் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட ரயில்வே காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.