இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேரை வரும் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று உயிர்த்த ராஜ் மற்றும் செல்வம் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் 17 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றனர். இன்று தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகையும் அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து சிறைபிடித்த மீனவர்களை விசாரணைக்காக இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் சிறைபிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்களையும் மன்னார் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, தமிழக மீனவர்களை வரும் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து, 17 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.