பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்
பழனி கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை (ரோப் கார்) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில் , படிப்பாதை மற்றும். ‘யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.