Homeசெய்திகள்தமிழ்நாடுகட்சிக்காரனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள் - நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

கட்சிக்காரனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள் – நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

-

RS Bharathi

தொண்டர்களின் உழைப்பால் தான், நீங்கள் எம்.பி., எம்.எல்.ஏ, கவுன்சிலராக உள்ளீர்கள், ஆகையால் கட்சிக்காரரகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள் என நிர்வாகிகளுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுரை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டமானது புது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரின் காலில் விழுந்து கேட்கிறேன் கட்சிக்காரனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். அவன் “உழைப்பால் தான்” இன்று நீங்கள் எம்.எல்.ஏ-வாகவும், எம்.பி- யாகவும், கவுன்சிலராகவும் உள்ளீர்கள்.

rs bharathi

கட்சிக்காரன் ‘உதவி’ இல்லையெனில், நீங்கள் இல்லை.கட்சிக்காரன் உங்களிடம் “சோற்றை” எதிர்பார்க்கவில்லை . அவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது “மரியாதை” மட்டும் தான். திமுக கட்சிக்காரன் “சுயமரியாதையும், கெளரவமும்” கொண்டவன். தனது தேவைக்காக அவன் “பிச்சை” எடுப்பானே தவிர, உங்களிடம் எந்த “உதவியும்” எதிர்பார்த்து வரமாட்டான். ஆகையால், தயவுசெய்து கட்சிக்காரனை “மதிப்புடன்” நடத்துங்கள் என்றார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு, திமுக தொண்டர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

MUST READ