spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
Photo: CM MKStalin

பொதுவுடைமைத் தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

we-r-hiring

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சுதந்திரப் போராட்ட தியாகியும், மிகச்சிறந்த பொதுவுடைமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தகைசால் தமிழர்’ என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.

102-வது பிறந்தநாளை காணும் பெரியவர் சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக, அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!

ஏழை, எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்த வரும் ஒரு மிகச்சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ