Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சிக்கு படகு சின்னம் வழங்க சீமான் கோரிக்கை!

நாம் தமிழர் கட்சிக்கு படகு சின்னம் வழங்க சீமான் கோரிக்கை!

-

சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்திற்கு பதிலாக, படகு சின்னம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டது. இந்த நிலையில், உரிய நேரத்தில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தைக் கோரி நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதன் காரணமாக, அந்த சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் தங்களுக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

MUST READ