Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

-

 

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!

அதேபோல், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதைச் செலுத்தினர். அத்துடன், பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி. மக்கள் பிரச்சனை எதுவானாலும் முதலில் குரல் கொடுத்தவர் விஜயகாந்த்; புரட்சிகரமான நடிப்பால் மக்கள் மனங்களைக் கொள்ளையடித்தவர். கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.

தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

ஈழப் பிரச்சனை, காவிரி பிரச்சனைகளுக்காக திரையுலகைத் திரட்டி குரல் கொடுத்தவர் விஜயகாந்த். கலைஞர், ஜெயலலிதா ஆளுமைகளாக இருந்தபோதே கட்சித் தொடங்கிய துணிச்சல்காரர். விஜயகாந்த் பசியில் இருந்தவர்; ஆனால் ஆவர் எண்ணற்றவர்களின் பசியை ஆற்றியவர்” என்று புகழாரம் சூட்டினார்.

MUST READ