Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் - செல்வப்பெருந்தகை பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் – செல்வப்பெருந்தகை பேட்டி!

-

- Advertisement -

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

18வது மக்களவை தேர்தலானது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மற்றொரு தொகுதி புதுச்சேரியில் ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியானது 10 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ