Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வில் இணைந்தார் சிம்லா முத்துச்சோழன்!

அ.தி.மு.க.வில் இணைந்தார் சிம்லா முத்துச்சோழன்!

-

 

அ.தி.மு.க.வில் இணைந்தார் சிம்லா முத்துச்சோழன்!

மறைந்த தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகளும், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் 49,000ஐ நெருங்கியது!

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததாலும், தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான மறைந்த சற்குண பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

சிம்லா முத்துச்சோழன், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு சுமார் 50,000 வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தாவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ