spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

-

- Advertisement -

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும்  செப்டம்பர் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு  அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ