spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் - அமைச்சர் பி. கீதாஜீவன்

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் பி. கீதாஜீவன்

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநீதிய என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் பொருநை இலக்கிய திருவிழா 2025 இன்று தொடங்கியது. மேலும் வரலாற்று சின்னங்கள் மற்றும் புத்தக கண்காட்சியை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்.

we-r-hiring

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் - அமைச்சர் பி. கீதாஜீவன்பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது,

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ,கீழடி அகழாய்வுகள் மூலமாக தமிழகத்தின் நாகரிகம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான என அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் சுவை நிறைந்தது ஆகையால் வருங்கால சங்கதியர்களுக்கு தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சமமாக அமைந்திருக்கிறீர்கள் இதைப்போல் பாலின வேறுபாடுகளை களைந்து அனைவரும் சமம் என நாம் என்ன வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ