- Advertisement -
அரசு கல்வியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசியர் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 02 வெளியிடப்பட்டது. / 2024, 14.03.2024 அன்று நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு 04.08.2024 அன்று நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும். நிர்வாக காரணங்களினால் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.