Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்

-

மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம் அல்லது மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தின் நிலையை பிரத்யேக இணையதளத்தில் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம் அல்லது மகளிர் உரிமைத்தொகைக்கான பிரத்யேக இணையதளத்திலேயே புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

 

MUST READ