வங்கிகளின் குறுகிய கால கடனுக்காக வட்டி விகிதத்தை 0.05% குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளாா்.
நாட்டின் பல்வேறு வணிக வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) குறுகிய கால கடனாகப் பெறும்போது செலுத்த வேண்டிய வட்டி (ரெப்போ வட்டி )இது வணிக வங்கிகள் தங்கள் பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய RBI யிடம் கடன் வாங்கும் போது நிர்ணயிக்கப்படும் வட்டி ஆகும். நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வி வங்கி மாற்றியமைப்பது வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் 0.5%-குறைத்து முடிவு எடுக்கப்பட்டது. இதனால், வங்கிகளின் குறுகியகால கடனுக்காக வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6% இருந்து 5.5% ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் 3 வது முறையாக குறைத்துள்ளது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களைச் சேர்த்து 1% ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதால் வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையும். கடந்த 6 மாதங்களில் மட்டும் 6.5% -லிருந்து 1% குறைந்து 5.5%-ஆக குறைந்துள்ளது.
30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்